சனி, 14 டிசம்பர், 2013

மகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்

           தி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை மகா கவி பாரதியாரின் 132 ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகளை நடத்தியது.

           புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 54 மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

          பாரதியாரின் நாட்டுப்பற்று  மற்றும் மொழிப்பற்றுப் பாடல்களை இசையோடு பாடும் பாட்டுப்போட்டி,

பெண்பாடும் பண்பாடும், மூவர்ணமும் நால்வர்ணமும், பழையசோறும் பாதாம்கீரும் ஆகிய தலைப்புகளில் கவிதை புனைந்து வழங்கும் போட்டி,

       பாரதியாரின் நாட்டுப் பற்றுப் பாடல்கள், மொழிப்பற்றுப்பாடல்கள், ஞானப்பாடல்கள், முப்பெரும் பாடல்கள், பாரதியார் கடந்த பாதை, பல்வகைப்பாடல்கள் ஆகிய ஆறு சுற்றுகளைக் கொண்ட வினாடி-வினாப் போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

        கவிதைப் போட்டிக்கு புலவர் மா.நாகூர், கவிஞர் ஆர்.நீலா, முனைவர் வீ.கே.கஸ்துர்ரிநாதன், ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர் களைத் தேர்வு செய்தனர்.

       பட்டிமன்றப் பேச்சாளர் வெள்ளைச்சாமி, இளந்திரு கி.அரிமோகன், சிதம்பர.ஈசுவரன் ஆகியோர் பாடல் போட்டிக்கு நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

          பாவலர் பொன்.க மற்றும் கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் வினாடி-வினாப் போட்டியினை நடத்த கவிராசன் இலக்கிய மன்றப் பொறுப்பாளர் க.முருகபாரதி, கவிஞர் மு.கீதா ஆகியோர் மதிப்பீட்டாளர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்வு செய்தனர்.

         கவிதைப் போட்டியில் பாவேந்தர் பாரதிதாசன் பொறியியல் கல்லூரி மாணவர் தர்மசாஸ்தா முதலிடத்தையும், சிறீபாரதி ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவி அ.சங்கீதா இரண்டாமிடத்தையும், மாமன்னர் கல்லூரி மாணவர் க்.அன்பரசு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

         இசைப்பாடல் போட்டியில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மாணவி மு.அபர்ணா முதலிடத்தையும், அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ம.வசந்தாதேவி இரண்டாமிடத்தையும், கீரை தமிழ்ச்செல்வன் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவி பாரதிபிரியா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

            வினாடி-வினாப் போட்டியில் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி சா.தாமரைச்செல்வி, வ.தமிழ்ச்செல்வி, ம.மதிமொழி ஆகியோர் குழு முதலிடத்தையும், அதே கல்லூரி பாத்திமாபீவி, மா.கவிதா, மெ.சங்கீதா ஆகியோர் குழு இரண்டாமிடத்தையும், மாமன்னர் கல்லூரி அ.அகல்யா, சீ.லலிதா,மு.அழகு ரேணுகாதேவி ஆகியோர் குழு மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

          போட்டிகள் முடிவுற்றதும் மன்ற நிறுவனர் பாவலர் பொன்.க அவர்கள் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

          வெற்றியாளர்களுக்கு புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள் வாழ்த்துரைத்து மதிப்புள்ள நூல்களைப்  பரிசுகளாக  வழங்கினார், ஆக்ஸ்போர்டு சமையல்கலைக் கல்லூரி முதல்வர் அ.சுரேசு, கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் ஆகியோர் பாராட்டிப் பரிசுகள் வழங்கினர்.

        போட்டி நிகழ்வுகளைமன்றப் பொருளாளர் சுப.இராசேந்திரன், கவிஞர் செ.சுவாதி, அ.குமார், வெ.பரமசிவம் ஆகியோர் ஒருங்கிணைத் திருந்தனர்.

       

மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் நன்றியுரையாற்றினார்.


3 கருத்துகள்: