செவ்வாய், 9 அக்டோபர், 2012

மணிமன்றப் பொறுப்பாளர்கள் தேர்தல்

மணிமன்றத்தின் 2012-14 ஆண்டிற்கான பொறுப்பாளர்கள் தேர்தல்                    23.09.12 அன்று 330பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது. மன்ற நிருவாகி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.  புதிய பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர்                          - திரு. பொன்.பாலசுப்பிரமணியன் எம்.ஏ.எம்.ஏ.,
செயலாளர்                      - திரு. சிதம்பர ஈசுவரன் எம்.ஏ., பி.எட்., டி.ஏ.எஸ்
பொருளாளர்                   - திரு. சுப.இராசேந்திரன்.
துணைத்தலைவர்கள் - 1. புலவர் மு.பாலசுப்பிரமணியன் எம்.ஏ.,  எம்.எட்.
                                                                    2. திரு.நா.செந்தில் பாண்டியன் பி.ஏ.,
துணைச் செயலாளர்கள் - 1. புலவர் மகா.சுந்தர் எம்.ஏ.,எம்,எட்,
                                                         2.கவிஞர் ரெ.சு.காசிநாதன் எம்.எஸ்ஸி., எம்.எட்.
செயற்குழு உறுப்பினர்கள் - 1. திரு.வெ.பரமசிவம்                                                                                                                     2.திரு மா.கண்ணதாசன்                                                                                                              3.கவிஞர்.வீ.கே.கஸ்தூரிநாதன் எம்.ஏ.,எம்.எட்.,                                                              4.திரு.இரா.செல்லையா பி.ஏ.,                                                                                                                
                                                             5. கவிஞர் ஆர்.நீலா.
தேர்தல் ஆணையர் முன் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன. 
1.தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக எவ்வித அறிவிப்புமின்றி  மன்றச் செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமலும் சந்தா செலுத்தாமலும் உள்ள கீழ்க் கண்டவர்கள் மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய மன்றம் முடிவு செய்கிறது 1. திரு.அய்.பிரகாசம் 2. திரு.அன்பு இரவிக்குமார். ஆகியோர்.
2. இவ்வாண்டில் கவிதை, நாடகப் பயிற்சிப் பட்டறை நடத்துவது
3.திங்கள் இயல்புக் கூட்டங்கள் ஒவ்வொரு திங்கள் முதல் சனிக்கிழமை மாலை நேரத்தில் நடத்துவது.4. திங்கள் கூட்டங்களில் சமூக மேம்பாட்டு சிந்தனைக் கருத்துகள் கலந்துரையாடல் நடத்துவது.
புதிய பொறுப்பாளர்கள் சார்பில் புலவர் மு.பா.அவர்கள் நன்றி கூறினார்.