திங்கள், 12 ஜனவரி, 2015

மணிமன்றம்- பொறுப்பாளர் தேர்தல்.

பொன்விழாக் கண்ட மணிமன்றத்தின் 2015-16 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் 10.01.2015 அன்று மாலை 330.பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையாளராக மன்ற நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் செயல்பட்டார்.

கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றி 2015-16 ஆம் ஆண்டிற்கான மணிமன்றப் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் - திரு பொன்.பாலசுப்பிரமணியன்  எம்.ஏ., எம்.ஏ
செயலாளர் - திரு ஆ.குமார் பி.ஏ.,
பொருளாளர் - திரு சிதம்பர.ஈசுவரன் எம்.ஏ., பி.எட்.,டி.ஏ.எஸ்.,
துணைத் தலைவர்கள் - புலவர் மு.பா.,எம்.ஏ.,எம்.எட்., எம்.பில்
                                                             - திரு.நா.செந்தில் பாண்டியன் பி.ஏ.,
துணைச் செயலாளர்கள் - கவிஞர் மகா.சுந்தர். எம்.ஏ., எம்.எட்.,
                                       - கவிஞர் மு.கீதா எம்.ஏ.எம்.எட்.,எம்.பில்.,   
செயற்குழு உறுப்பினர்கள் 1. திரு.ரெ.சு.காசிநாதன் எம்.எஸ்ஸி., எம்.எட்.,
                                                       2. திரு.ச.கோகர்ணேசன் பி.ஏ.,
                                                       3. திரு.இரா.செல்லையா பி.ஏ.,
                                                       4.திரு.சுப.இராசேந்திரன்
                                                       5. திரு.வெ.பரமசிவம்.
 கூட்ட நடவடிக்கைகள் -1 இவ்வாண்டில் கலைஇலக்கியத்தில் சிறந்த சேவைசெய்த மணிமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு செய்யப்பட்டது. 

புதிய மரபுகள், கம்பன் தமிழும் கணினித் தமிழும். முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே” ஆகிய நூல்களை வெளியிட்ட கவிஞர் நா.முத்துநிலவன்,
 2. “நிலவோடு பேசும் நேரம்” என்னும் நூலை வெளியிட்டு கவிஞர் செ.சுவாதி,
 3. கவிராசன் இலக்கியக் கழகத்தால் நல்லாசிரியர் விருது பெற்றவரும் “ஒருகோப்பை மனிதம் ” என்னும் கவிதை நூலை வெளியிட்டவருமான கவிஞர் மு.கீதா
,4. பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் செய்யுள் பகுதிகளை நாடக வடிவில் காணொளி வட்டாக வெளியிட்ட கவிஞர் மகா.சுந்தர் மற்றும் மு.கீதா, 

5.க்ம்பன்கழகப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற பாவேந்தர் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் ரெ.சு.காசிநாதன் ஆகியோர் மன்றத்தால் பாராட்டப் பெற்றனர்.

2. இவ்வாண்டில் சிறுகதை எழுத்தாளர் திரு.செம்பை மணவாளன் அவர்கள் மன்றத்தில் தன்னை புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

3. இவ்வாண்டு செயல்திட்டத்தில் வழமையான திங்கள் கூட்டங்களுக்குப் பதிலாக மூன்று திங்களுக்கு ஒருமுறை தமிழ்ச் சான்றோர் ஒருவரை அழைத்துச் சிறப்புக் கூட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது.

4. இரண்டு ஆண்டுகளாக உறுப்பினர் கட்டணம் செலுத்தாமலும் மன்றத்தின் நடவடிக்கைகளில் மூன்று திங்கள்கள் எவ்வித அறிவிப்புமின்றிக் கலந்து கொள்ளாத உறுப்பினர்கள் தாங்கள் மன்றத்தில் தொடர்ந்து செயல்பட இயலாமல் தாங்களே விலகிக் கொண்டவர்களாக அடுத்த கூட்டத்தில் இறுதி செய்ய முடிவானது.

புதிய பொறுப்பாளர் சார்பில் மணிமன்றச் செயலாளர் திரு ஆ.குமார் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.