ஞாயிறு, 30 ஜூன், 2013

மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா - சிறப்புக் கூட்டம்

               30.06.2013 அன்று முற்பகல் மணிமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் வரவேற்புரையாற்றினார்.
           
               49 ஆவது ஆண்டுவிழா தொடர்பாக கடந்த கூட்டத்தில் வடிவமைக்கப் பட்ட  தீர்மானங்கள் இறுதிவடிவம் பெற்றன. 

 விழாவில் முதல் மாணவர் விருது வழங்க மாவட்ட உயர் அலுவலர்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும். மாணவச் சாதனையாளர்களைப் பாராட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் அவர்களையும், வாழ்த்துரைக்க முத்துநிலவன், தங்கம்மூர்த்தி ஆகியோரையும் அழைக்க உறுதிசெய்யப் பட்டது.
              
               மன்ற உறுப்பினர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி கவிஞர் நீலா இன்னும் மூன்று நாள்களுக்குள் உறுதி செய்ய வில்லையெனில்  சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சி உறுதிப்படுத்த தீர்மானிக்கப் பட்டது.

            மன்ற உறுப்பினர் வீ.கே.கஸ்தூரிநாதன் ( எ ) வீ.கருப்பையன் 28.06.2013 அன்று மாமன்னர் கல்லூரியி்ல் நடைபெற்ற பொது வாய்மொழித் தேர்வி்ல் “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள்“ என்னும் ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டத்திற்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரைக்கப் பட்டதைப் பாராட்டி அவருக்கு நினைவு நூல் பரிசளிக்கப் பட்டது.
      
           அண்மையி்ல் புதுக்கோட்டை விசயரெகுநாதபுரம் பள்ளி மாணவர்கள் 7 பேர் ஊர்தி விபத்தில் மரணமடைந்ததற்கு மன்றம் இரங்கலைத் தெரிவிக்கிறது.

           உத்தர்கண்டில் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர்க்கும், அங்கு மீட்புப் பணியின் போது இன்னுயிர் நீத்த மதுரை விமானி பிரவீன் அவர்களுக்கும் மன்றம் தனது இரங்கலைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

         நிறைவாக மன்றத் துணைச் செயலாளர் நா.செந்தில்பாண்டியன் நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது.

ஞாயிறு, 2 ஜூன், 2013

மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா-திட்டமிடல் கூட்டம்

                 02.06.2013 மாலை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு திட்டமிடல் கூட்டம் புதுக்கோட்டையில் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிர மணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.
                 கவிஞர் ஆர்.நீலா வரவேற்புரையாற்றினார்.
தலைவர் 49ஆவது ஆண்டுவிழா பற்றிய முன்னுரை வழங்கினார். மன்ற நிருவனர் புலவர் பொன்.கருப்பையா ஆண்டுவிழாத் திட்டங்களை முன்வைத்து விளக்கினார். கருத்துகள் மீதான விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
          1 .மன்ற 49 ஆவது ஆண்டுவிழாவினை எதிர்வரும் 20.07.2013 அன்று வழக்கம்போல் எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் நடத்துவது.
         2. ஆண்டுவிழாவில் 2013 மேல்நிலை, இடைநிலை அரசு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு, அரசுநிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         3.நகர எல்லைக்குட்பட்ட அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை, இடைநிலை 2013 அரசு பொதுத்தேர்வுகளில்  பள்ளி வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         4.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 2013 அரசு பொதுத்தேர்வுகளில் . மேல்நிலை,
இடைநிலைத் தேர்வுகளில்  முழுத்தேர்ச்சி பெற்ற அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குவது.
         5.சண்முகநாதன் பொறியியல் கல்லூரி புதிய கண்டுபிடிப்புக்கான மாணவர் சாதனையாளர் மூவர்க்கும், தச்சன்குறிச்சி இளம் விஞ்ஞானி மாணவர் ஒருவருக்கும் விருதுகள் வழங்குவது.
         6. செம்மொழி இளம் தமிழறிஞர் விருது  பெற்ற மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவன் அவர்களைப் பாராட்டி விருது வழங்குவது.
         7.ஆண்டுவிழாவில் கவிஞர் ஆர் நீலா ஒருங்கிணைப்பில் மன்ற உறுப்பினர் எழுவர் பங்குபெறும் கல்வி விழிப்புணர்வு நாடகம் (30 நிமிடங்கள்) மற்றும் சிதம்பர ஈசுவரன் பங்கேற்கும் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சியை(15 நிமிடம்) நடத்துவது.
        8. ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு மரகதவள்ளி அறக்கட்டளையின் பங்களிப்பு நிதி( ரூ5000) உடன் மன்ற உறுப்பினர்கள் தலா ரூ 1000 வழங்குவது என முடிவாற்றப்பட்டது.
         9.விழாப் பணிக்குழு கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் செயல்படுவது.
       10.விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர், சமூக ஆர்வலர் ஐவர் ஆகியோரை அழைப்பது.

ஊரக வளர்ச்சி வங்கி இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மன்ற உறுப்பினர்                                   திரு நா. மணிகண்டன் அவர்கள் பாராட்டப் பட்டார்.
நிறைவில் மன்றச் செயலாளர் திரு.சித.ஈசுவரன் நன்றி கூறினார்.