திங்கள், 28 ஏப்ரல், 2014

ஏப்ரல்-14 திங்கள் கூட்டம்.

         26.04.2014 அன்று மாலை மன்றத் தலைவர் இல்லத்தில்   மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் திங்கள் கூட்டம் மன்றத் தலைவர் பொ.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மன்றத் துணைச் செயலாளர் மகா.சுந்தர் வரவேற்புரையாற்றினார்.

        கூட்டத்தில் அமைப்பின் நிருவாகி பாவலர் பொன்.க . பொன்விழா மலர் விளம்பரம் பெற, வருகை தந்திருந்த உறுப்பினர்களுக்குத் தலா இரண்டு கோரல் படிவங்களை வழங்கி, வரும் மே.15 தேதிக்குள் விளம்பரங்களை உறுப்பினர்கள் மலர்க் குழுவிடம் ஒப்படைக்கக் கேட்டுக் கொண்டார்.

       மலரில் இலக்கியம் சார்ந்த படைப்புகள் வெளியிடுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் பற்றிப் பேசப்பட்டது. அதுபற்றிய முடிவினை மலர்க்குழு மேற்கொள்ளப் பொதுக்குழு ஒப்புதல் அளித்தது.

       மலரில் மன்ற உறுப்பினர்கள் மாநில, மாவட்ட அளவில் பாராட்டுப் பெற்ற ஒளிப்படங்கள் தலா ஒன்று வெளியிட முடிவாற்றப் பட்டது.

      பொன்விழாவில் நடத்த உள்ள சமூக மேடைநாடகத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

      சூன்திங்கள் இறுதி வாரம் அல்லது சூலைத் திங்கள் முதல் வாரத்தி்ல் மன்றத்தின் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கலை இலக்கியத் திறன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப் பட்டது.

     பொன்விழா மலரில்  பணிக்குழுக்களைப் பதிவு செய்ய முடிவாற்றப் பட்டது.

   பணிக்குழுக்கள்.

1.மலர்க்குழு - பாவலர் பொன்.கருப்பையா, கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன், புலவர் மகா.சுந்தர், கவிஞர் மு.கீதா, கவிஞர்.செ.சுவாதி

2.மாணவர் கலை இலக்கியத் திறன் போட்டி நடத்துக் குழு -                      
கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர்  வீ.கே.கஸ்தூரிநாதன், திரு சிதம்பர ஈசுவரன், திரு ரெ.சு.காசிநாதன், திரு.ஆ.குமார், கவிஞர் மா.கண்ணதாசன், கவிஞர் மு.கீதா, திரு நா.செந்தில்பாண்டியன்.

3.வரவேற்புக்குழு -  பாவலர் பொன்.க., திரு பொன்.பாலசுப்பிரமணியன், முனைவர். வீ.கே.கஸ்தூரிநாதன், கவிஞர்.ரெ.சு.காசிநாதன், புலவர் மு.பாலசுப்பிரமணியன், திரு.இரா.செல்லையா, கவிஞர் ஆர்.நீலா, திருமதி இரா.நாகலெட்சுமி, திரு.ஆ.செல்வராசு

4.செய்தித் தொடர்பு மற்றும் விளம்பரக் குழு - கவிஞர் செ.சுவாதி, கவிஞர் மா.கண்ணதாசன், திரு.ஆ.குமார், திரு.நா.மணிகண்டன், திரு.சுப.இராசேந்திரன், திரு.ச.கோகர்ணேசன்,திரு.கோ.வள்ளியப்பன்.

5.விருந்தோம்பல் குழு - திரு.சுப.இராசேந்திரன், திரு.ஆ.செல்வராசு, திரு ஆ.குமார், இரா.சங்கரநாராயணன், கவிஞர் செ.சுவாதி, கவிஞர் மா.கண்ணதாசன், திரு இரா.செல்லையா, திரு.கோ.வள்ளியப்பன், திரு வெ.பரமசிவம்.

6. அரங்கப் பொறுப்புக் குழு - திருவாளர்கள் க.மதிவாணன், நா.செந்தில்பாண்டியன், இரா.சங்கரநாராயணன், மகா.சுந்தர், நா.மணிகண்டன், இராச.ஜெய்சங்கர். கி.அரிமோகன்.

7.பட்டிமன்றக் குழு - கவிஞர் நா.முத்துநிலவன், முனைவ்ர்.வீ.கே.கஸ்தூரிநாதன், புலவர் மு.பாலசுப்பிரமணியன், புலவர் மகா.சுந்தர், கவிஞர் மு.கீதா.

8.இன்னிசை நிகழ்த்துக் குழு - பாவலர் பொன்.க, திரு சிதம்பர ஈசுவரன். இளந்திரு கி.அரிமோகன். புலவர் மகா.சுந்தர், கவிஞர் ஆர்.நீலா,   திரு இராச.ஜெய்சங்கர்.

9. நாடகக் குழு - பாவலர் பொன்.க. சிதம்பர ஈசுவரன், திருமதி இரா.நாகலெட்சுமி, சுப.இராசேந்திரன், திரு ஆ.குமார், திரு ரெ.சு.காசிநாதன், திரு க.மதிவாணன்,                         திரு வெ.பரமசிவம், திரு ச.கோகர்ணேசன்.

மேற்கண்ட முடிவுகளுக்குப் பின்னர் மன்றச் செயலாளர் திரு.சிதம்பர ஈசுவரன்  நன்றி கூறினார்.

வெள்ளி, 21 மார்ச், 2014

மணிமன்ற பொன்விழா - திட்ட வரைவுக் கூட்டம்.

                      20.03.2014 மாலை மணிமன்றப் பொன்விழா திட்ட வரைவுக் கூட்டம் மன்றத் தலைவர் திரு. பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                   மன்றச் செயலாளர் திரு.சிதம்பர.ஈசுவரன் வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட வரைவுகள் மேற்கொள்ளப் பட்டன.

1. மணிமன்றப் பொன்விழாவினை முன் கூட்ட முடிவின்படி 2014 சூலைத் திங்கள் இரண்டாம் அல்லது  மூன்றாம் வார சனி, ஞாயிறு கிழமைகளில் இரு நாள்கள் நடத்துவது.

2.பொன்விழா தொடக்க விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் திறன்வெளிப்பாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது. ( போட்டிகள் முன்னதாக நடத்துவது )
3.முதல்நாள் நிகழ்வுகளில் இயல் ( மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் ) கல்வி, மகளிர் . சமூக மேம்பாட்டினை கருவாகக் கொண்ட 45 நிமிட சமூக மேடை நாடகம்  அரங்கேற்றுவது ( மன்ற உறுப்பினர்கள் பங்கு )
4.இரண்டாம் நாள் மாலை நிறைவு விழாவில் வழக்கமான முதல் மாணவர்கள் விருது வழங்கும் விழா, முழுத்தேர்ச்சிப் பள்ளிகளுக்கும் சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா இவற்றோடு மணிமன்றப் பொன்விழா மலர் வெளியிடுவது
5.இரண்டாம் நாள் தொடக்கத்தி்ல் மன்ற உறுப்பினர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவது.
6. பாவலர பொன்.க வின்  தமிழ்ச்சீர்மை,சமுதாய விழிப்புணர்வுப் பாடல் குறுவட்டு வெளியிடுவது.
7. பொன்விழா மலர் 100 பக்கங்கள் கொண்டதாகவும், அதில் மன்றத் தோற்றம் வளர்ச்சி, மன்ற உறுப்பினர் சிறப்புகள். புதுக்கோட்டையின் புகழ்ச் சான்றுகள், இலக்கிய, சமூக அமைப்புகளின் பார்வையில் மணிமன்றம் , விளம்பரங்கள் என்பவை இடம் பெறல்.
8. மலர் தயாரிப்புக் குழுவாக பாவலர் பொன்.க.,கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர் வீ,கே.கஸ்தூரிநாதன், புலவர் மகா.சுந்தர், கவிஞர்கள் மு.கீதா, செ.சுவாதி ஆகியோர் இறுதிப் படுத்தப் பட்டனர்.
9.மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்கள் தன்விவரக் குறிப்புகளை 31.03.2014 நாளுக்குள் மலர்க்குழுஅவர்களுக்கு அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
10.  மலரில் வெளியிடத்தக்க விளம்பரங்களை மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு விளம்பரங்கள்  பெற்றுத்தரல் வேண்டும்.

    மேற்கண்ட வரைவுகளுக்குப்பின்னர் மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் நன்றி கூறினார்.