ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று

                    13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி  கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்றுகளாக  வினாடி-வினாப் போட்டியினை நடத்தியது.
             
                    முதல் சுற்று - பாரதியின் நாட்டுப் பற்றுப்பாடல்கள்.

1.வந்தே மாதரம் என்போம்... இப்பல்லவியின் அடுத்த வரி என்ன?

2. வந்தனைகூறி மனதிலிருத்தி என் வாயுற வாழ்த்தேனோ? இவ்வரி பாரதியாரின் எப்பாடலில் வருகிறது?

3.காவிரி வெற்றிலைக்கு எவற்றை மாறுகொள்வோம் - எனப் பாரதியார் பாடியுள்ளார்?

4. கஞ்சி குடிப்பதற்கில்லார்.....  இதனை அடுத்து வரும் வரி என்ன?

5.எப்போது ஜகத்தினை அழித்திடுவோமெனப் பாரதியார் குமுறுகிறார்?

6. மேவிய ஆறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு... என்றார். என்னென்ன ஆறுகளை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

7.பொழுதெல்ல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டுபோகவோ? இவ்வரிகள் யாரால் யாருக்குச் சொல்லப்பட்டதாகப் பாரதி எழுதியுள்ளார்?

8. ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி, கொடுங்காலன் அலறி வீழ்ந்தான் - எந்தப் புரட்சியினை... யாருடைய வீழ்ச்சியினை இவ்வரிகளில் பாரதி காட்டுகிறார்?

9. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி.... இப்பாடல் எந்தத் தலைப்பில் யாரைப் பழித்துப் பாடப்பட்டது?

10 எவற்றுக்கு வந்தனை செய்ய வேண்டும் ? எவரை நிந்தனை செய்ய வேண்டுமென்கிறார்  பாரதி?

இந்த எளிய வினாக்களுக்குரிய விடைகளை pudugaimanimandram blogspot ல் கண்டு மதிப்புப் பெறுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக