புதன், 20 பிப்ரவரி, 2013

சிலம்பின் சிலிர்ப்பு-நாடகம்

தி.பி.2044 சுறவம் 13 ஆம் நாள் காரிக்கிழமை (26.01.2013) , புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் , புதுக்கோட்டை மணிச்சுடர் கலைக்கூடம்  வழங்கிய, பாவலர் பொன்.க.இயக்கிய “ சிலம்பின் சிலிர்ப்பு“ நாடகத்தின் சில காட்சிகள்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

                புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழா, 26, 27-1.2 013 ஆகிய இரு நாள்கள் புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள்  திருமண அரங்கி்ல் நடை பெற்றது. 
                     26.01.2013 மாலை  கருணாகரன் குழுவினரில்  மங்கள இசை நிகழ்வினைத் தொடர்ந்து  இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.இளங்கோவடிகள் மன்றத் தலைவர் திரு. முரு. வைரமாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
                   அதனையடுத்து புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் மன்றக் கொள்கை விளக்கமளித்தார்.  தொடக்க உரையினை திரு. சேகர் அவர்கள் ஆற்றினார். சிலப்பதிகாரப் பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இரவு 8.00 மணிக்கு மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையில்,
புதுகை மணிச்சுடர் கலைக் கூடம் வழங்கிய புலவர் பொன்.க. வின் “சிலம்பின் சிலிர்ப்பு“ என்னும் காப்பிய நாடகம் நடைபெற்றது.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதை முதல் வழக்குரை காதை வரையிலான நிகழ்வுகள் மேடை நாடக வடிவில் அரங்கேறியது. முத்தமிழ்ப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் மேடைக்கதை, உரையாடல். பாடல்களை ஆக்கி இயக்கி இருந்தார்.
                  அந்நாடகத்தி்ல் , கண்ணகியாக  புலவர்.இரா.நாகலெட்சுமி, கோவலனாக புலவர் மகா.சுந்தர், பாண்டியன் நெடுஞ்செழியனாக பொன்.க.மதிவாணன், கோப்பெருந்தேவியாக கவிஞர் செ.சுவாதி,  மாதரியாக கவிஞர் ஆர்.நீலா, பொற்கொல்லராக கவிஞர். வீ.கே.கஸ்தூரிநாதன், அமைச்சராக நா.செந்தில்பாண்டியன், ஊர்க்காப்புப் படைத் தளபதியாக சிதம்பர ஈசுவரன், ஒறுப்புப் படையாளனாக நா.மணிகண்டன், பொற்கொல்லரின் உதவியாளர் துருத்தி மற்றும் கோட்டைவாயில் காப்பாளராக இராச.செய்சங்கர், உதவியாளர் திருத்தி மற்றும் வாயில் காப்பாளராக சு.இராசேந்திரன், அந்தப்புர வாயில்காப்பாளராக கவிஞர் கண்ணதாசன், அரசவை வாயில் காப்பாளராக சொ.இளங்கோ, அரசவை நாட்டிய மங்கையாக செல்வி பா.ரூபபர்வதா. வழிப்போக்கர்களாக புலவர் மு.பா, செம்பை மணவாளன் ஆகியோர் பங்கேற்று நடித்திருந்தனர். உடைகள் மற்றும் ஒப்பனை செய. சண்முகராசாவும் இசையினை சு.இராசசேகர்,  மு.எழிலரசன் ஆகியோரும் செய்திருந்தனர். 
                       அரங்கப் பொறுப்பினை ஆ.குமார், செ.பாசுகர், வெ.பரமசிவம், மஸ்தான் பக்ருதீன் ஆகியோர் ஏற்றிருந்தனர், பின் குரல் கவிஞர் கீதா மற்றும் மு.பா. 
நாடகக் காட்சிகளை  செல்வா ஒளிப்பதிவு செய்தார்.. ஒளி, ஒலி அமைப்பினை புதுகை தனலெட்சுமி செய்திருந்தார். 
                    72 நிமிடங்கள் பார்வையாளர்களை மேடை நோக்கி ஈர்த்து வைத்த அளவில் நாடகம் சிறப்பாக இருந்தது. பங்கேற்றோர்க்கு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் பாராட்டி. நினைவுக் கேடயங்களை வழங்கினார்.