புதன், 25 மே, 2011

kodai ariviyal thiruvizha

புதுக்கோட்டை யில்  தமிழ் நாடு  அறிவியல் இயக்கத்தின் சார்பாக கோடை அறிவியல் திருவிழா கடந்த மே  17 .18 .19 ஆகிய  நாள்களில்  சிறப்பாக நடை பெற்றது.6 முதல் 9   வகுப்பு பயிலும்  .56 மாணவர்கள் அத்திருவிழாவில் பங்கேற்றனர் . திருவிழாவினை தணிக்கையாளர் தியாகராஜன் அவர்கள் தொடக்கி வைத்தார் .அறிவியல் இயக்க செயல்பாடுகள் பற்றியும் திருவிழாவின் நிகழ்வுக்கூறுகள் பற்றியும் த.அ.இயக்க மாநில  பொது  செயலாளர்  பாலகிருஷ்ணன் விளக்கினார் .அதனைத்தொடர்ந்து காகித மடிப்புக்கலை பற்றி சதாசிவம் அவர்களும், சீன காகித வடிவக்களை பற்றி மதிவாணன் அவர்களும் , எளிய அறிவியல் ஆய்வுகள் புவியரசு அவர்களும் , அறிவியல் அற்புதங்களை விளக்குதல் பற்றி பாவலர்பொன். கருப்பையா    அவர்களும், மாணவர்களுக்கு விளக்கினர் .அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் பாடல்களும் விளையாட்டுகளும் உற்சாகமூட்டின. கதை சொல்லும் கலை பற்றி கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பயிற்சியளித்தார் .புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் குள ஆய்வு பற்றி மணவாளன் குமரேசன் ஆகியோரும் மர  ஆய்வு பற்றி பிரபாகரன் ,ஜெயபாலன் ஆகியோரும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளாய்  இருந்தனர் .நிறைவு நாளில் அறிவியல் அறிஞர் சுகுமாரன் அவர்களை மாணவர்கள் சந்தித்து பல்லுயிரிகள் பற்றிய விளக்கம் பெற்றனர் .நிறைவு விழாவில் ரூபபர்வதாவின் நடனத்தைத்தொடர்ந்து , புதுக்கோட்டை மாவட்டகல்வி அலுவலர் பரமசிவம் அவர்கள் மானவர்களைப் பாராட்டி  சான்றிதழ்கள் வழங்கினார்.சேதுராமன் அவர்கள் நிகழ்ச்சியினை தொகுக்க ,வீரமுத்து அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது .    .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக