மணிமன்றத்தின் திங்கள் கூட்டம் 30.03.2013 அன்று விடுதியில் மன்றத்தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.
மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
புதிய உறுப்பினராக கவிஞர் சுவாதி மன்றத்தில் இணைந்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஈழத்தமிழர் இனப் படுகொலைத் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புசபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென்றும். அதற்காக தமிழகமெங்கும் நடக்கும் மாணவர் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவினை மன்றம் அளிப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
2.“சிலம்பின் சிலிர்ப்பு “ காப்பிய நாடகத்தை வெளி அரங்கி்ல் நடத்த, இயக்குநர் நடிகர்கள் இசைவிற்கேற்ப முடிவு செய்வது எனத் தீர்மானிக்கப் பட்டது.
3. மன்றத்தி்ன் 49 ஆவது ஆண்டுவிழாவினை சூலைத்திங்கள் மூன்றாம் வாரத்தில் நடத்துவது.
அவ்விழாவில் கடந்த ஆண்டினைப் போலவே புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளி்ல் பயின்று 2013ல் 10,12 அரசுப் பொதுத் தேர்வுகளி்ல் பள்ளி அளவி்ல் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், வருவாய் மாவட்ட அளவி்ல் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது என்றும் முடிவாற்றப் பட்டது.
4.அவ்விழாவில் மாணவச் சாதனையாளர் மூவருக்கும், இளம் செம்மொழி அறிஞர் விருது பெற்ற முனைவர் சு.மாதவன் அவர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
5.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
6.ஆண்டு விழாவி்ல் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இன்னிசை, வழக்காடுமன்றம் ( 60 நிமிட) கலை நிகழ்ச்சி நடத்த முடிவாற்றப் பட்டது.
7. விழாச் செலவினங்களை மரகதவள்ளி அறக்கட்டளை மற்றும் மன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்வது என முடிவாற்றப் பட்டது.
தீர்மானங்களை மன்ற நிருவாகி முன்மொழிய தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றன..
நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றியுரையாற்றினார்.
மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
புதிய உறுப்பினராக கவிஞர் சுவாதி மன்றத்தில் இணைந்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஈழத்தமிழர் இனப் படுகொலைத் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புசபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென்றும். அதற்காக தமிழகமெங்கும் நடக்கும் மாணவர் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவினை மன்றம் அளிப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
2.“சிலம்பின் சிலிர்ப்பு “ காப்பிய நாடகத்தை வெளி அரங்கி்ல் நடத்த, இயக்குநர் நடிகர்கள் இசைவிற்கேற்ப முடிவு செய்வது எனத் தீர்மானிக்கப் பட்டது.
3. மன்றத்தி்ன் 49 ஆவது ஆண்டுவிழாவினை சூலைத்திங்கள் மூன்றாம் வாரத்தில் நடத்துவது.
அவ்விழாவில் கடந்த ஆண்டினைப் போலவே புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளி்ல் பயின்று 2013ல் 10,12 அரசுப் பொதுத் தேர்வுகளி்ல் பள்ளி அளவி்ல் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், வருவாய் மாவட்ட அளவி்ல் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது என்றும் முடிவாற்றப் பட்டது.
4.அவ்விழாவில் மாணவச் சாதனையாளர் மூவருக்கும், இளம் செம்மொழி அறிஞர் விருது பெற்ற முனைவர் சு.மாதவன் அவர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
5.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
6.ஆண்டு விழாவி்ல் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இன்னிசை, வழக்காடுமன்றம் ( 60 நிமிட) கலை நிகழ்ச்சி நடத்த முடிவாற்றப் பட்டது.
7. விழாச் செலவினங்களை மரகதவள்ளி அறக்கட்டளை மற்றும் மன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்வது என முடிவாற்றப் பட்டது.
தீர்மானங்களை மன்ற நிருவாகி முன்மொழிய தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றன..
நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றியுரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக